Tuesday, October 14, 2014

அம்மம்மா காற்று வந்து

அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
பூ வாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும்
நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும்
கை தேடி கை தேடிக் கன்னம் கொஞ்சம் வாடும்

அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
பூ வாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும்

யாரோ வந்து நேரே நின்று என்னை மெல்ல கொஞ்சும் சுகமோ
நீரில் நின்று தேனும் தந்து அள்ளி அள்ளி கொள்ளும் சுகமோ
தள்ளாடி தள்ளாடி செல்லும் பெண்ணை தேடி
சொல்லாமல் கொள்ளாமல் துள்ளும் எண்ணம் கோடி

அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
பூ வாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும்
நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும்
கை தேடி கை தேடிக் கன்னம் கொஞ்சம் வாடும்

ஏதோ இன்பம் ஏனோ தந்து
என்னை தொட்டு செல்லும் வெள்ளமே
தானே வந்து தானே தந்து
தள்ளி தள்ளி செல்லும் உள்ளமே
அன்னாளில் என்னாளும் இல்லை இந்த எண்ணம்
அச்சாரம் தந்தாயே அங்கம் மின்னும் வண்ணம்
அம்மம்மா ஆ..

அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
பூ வாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும்
ஆசை வெள்ளம் ஓடும்
----------------------------------------------------
பாடல்: அம்மம்மா காற்று வந்து
திரை படம்: வெண்ணிற ஆடை
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்

No comments:

Post a Comment