நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
என்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ
காதலைத் தேடி நான் அழுதேனோ
காரணத்தோடே நான் சிரித்தேனோ
உன்னைக் கண்ட போது நினைவுகள் ஏது
உன்னைக் கண்ட போது நினைவுகள் ஏது
நீ வந்த போது நிம்மதி ஏது
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
என்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ
இனமறியாமல் நானிருந்தேனே
மனமொன்று தந்து மயங்க வைத்தாயே
கனவுகளெல்லாம் நீ வளர்த்தாயே
கையில் வராமல் பறித்து விட்டாயே
பறித்து விட்டாயே
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
என்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
---------------------------------------------------------------------------------
பாடல்: நீராடும் கண்கள் இங்கே
படம்: வெண்ணிற ஆடை
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
No comments:
Post a Comment